வியாழன், 27 ஜூன், 2013

ஜலதரங்கம் கர்நாடக இசைக் கலைஞர்.சீதா துரைசுவாமி

ஜலதரங்கம் எனில் "நீர் அலைகள்" என பொருள் கொள்ளலாம். ஜலதரங்கம் என்பது ஓர் இசைக்கருவி. இந்த கருவி குறித்த குறிப்பு தமிழ் சங்க இலக்கியத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கு மேற்கோள் காட்டும் அளவிற்கு சங்க இலக்கியம் தெரியவில்லை. இந்தக் கருவியை இசைக்கும் கலைஞர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். உடனே நினைவில் வருவது கர்நாடக இசைக் கலைஞர் ஆனையம்பட்டி கணேசன். இந்த கருவி வெவ்வேறு அளவுகளைக் கொண்ட சைனா பீங்கான் கிண்ணங்களை அரை வட்டத்தில் வைத்து அவைகளில் நீர் ஊற்றி குச்சியால் அடிக்கும் சமயம் விதவிதமான ஒலிகளைக் கொடுக்கிறது. கிண்ணம், குச்சி,நீர் இதைக் கொண்டு என்னய்யா சங்கீதம் என்கிறீர்களா? கேட்க சுகமாகத் தான் இருக்கும். கேட்டுத் தான் பாருங்களேன், இதுவரை கேட்டதில்லை எனில்.




தீடிரென ஜலதரங்கத்தைப் பற்றி ஏன் எழுதுகிறேன் என்கிறீர்களா? சீதா துரைசுவாமி எனும் ஜலதரங்கக் கலைஞரைப் பற்றிய குறிப்பு தான் இந்தக் கட்டுரை.இவர் எங்க நெல்லை மாவட்டத்திலிருக்கும் அடசாணி என்ற ஊரில் 1926 ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே கர்நாடக இசை ஆர்வம் மேலோங்கியதைக் கொண்டு 11 வயதில் சென்னை இசைக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சண்முகம் செட்டியார் மற்றும் பேராசிரியர் சாம்பமூர்த்தி அவர்களின் வழி காட்டலில் ஜலதரங்கம் கற்றறிந்தார். இவரின் சிறு வயது ஞானத்திற்கு ஓர் உதாரணம். சண்முகம் செட்டியார் "சங்கராபரணம்" ராகம் வசிக்குமாறு ஜலதரங்க பீங்கான்களை அமைத்திருந்தார். அதனை சீதா அவர்கள் "மாயாமாலவ கௌளை" ராகத்தை வசிப்பதற்கு ஏற்றார்போல் மாற்றி அமைத்துள்ளார். அதாவது பீங்கான் கிண்ணத்தில் நீரை ஊற்றினால் மேல் ஸ்தாயி (ஹிக்ஹெர் நோட்), நீரைக் குறைத்தால் கீழ் ஸ்தாயி வசிக்க முடியும் என்ற அடிப்படையை புரிந்து கொண்டார். இவர் இசைக் கல்லூரியில் படிக்கும் போது தான் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே. பட்டம்மாள் அவர்களும் இங்கு படித்துள்ளார்கள். அந்த காலத்தில் இசைக் கல்லூரியில் ஆறு ருபாய் சம்பளம். அதில் மூன்று ருபாய் சீதா அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ஆக கிடைத்துள்ளது.

நன்றி: http://www.maduraimessenger.org/printed-version/2012/august/cover-story/

அந்த கால பெண்களுக்கே உண்டான தடைக் கற்கள் இவருக்கும் அணையாக அமைந்ததில் வியப்பில்லை. 14 வயதில் திருமணம். பெண்கள் மேடைக் கச்சேரிகள் செய்யக் கூடாது என்ற கட்டுப்பாடு இவரையும் கட்டிவைத்தது.பிறகு தனது 41 ஆம் வயதில் 1968 ஆம் ஆண்டு மேடைக் கச்சேரிகள் செய்யத் துவங்கியுள்ளார். சைக்கிளோ அல்லது நீச்சலோ கற்றது போல் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவருக்கு ஜலதரங்கம் வாசிப்பில் எந்த பிரச்சனையுமில்லை. இவர் மடிசார் கட்டிக் கொண்டு தான் எல்லா நிகழ்ச்சிகளிலும் வசித்ததால் இவருக்கு "மடிசார் மாமி" என்ற பெயரும் உண்டு. இவரைப் பற்றி மேலும் பல விபரங்கள் இங்கு கிடைக்கிறது.

இவர் இந்த வருடம் மார்ச் மாதம் 14 ஆம் தேதி இயற்கை எய்தினார். இவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்.. இவருடைய சில பாடல்களை கீழே கொடுத்துள்ள இணைப்பில் கேட்டு மகிழவும்.

3 கருத்துகள்:

  1. சீதா துரைசுவாமி - ஜலதரங்கக் கலைஞரை பற்றிய இணைப்புகளுக்கு நன்றிகள்...

    அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. சார் வணக்கம் எனக்கு ஜலதரங்கம் இசைக்கருவிகள் வேண்டும் எங்கு கிடைக்கும் pls reply me

    பதிலளிநீக்கு