செவ்வாய், 19 மே, 2009

பிரபாகரனின் மரபணு சோதனையும்,சில சந்தேகங்களும்


மரபணு சோதனை செய்து பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்ததாக இலங்கை அரசு கூறுகிறது.ஆனால் என்ன முறையில் இது செய்யப்பட்டது என்ற அறிவியல் பூர்வமான விளக்கத்தைக் கொடுக்கத் தவறி விட்டது.சரி எந்தெந்த முறையில் இந்த சோதனை மேற்கொள்ள முடியும் என்று பார்ப்போம்.

1. பிரபாகரனின் தாய் அல்லது தந்தையின் மரபணுக்களின் மாதிரிகள் உபயோகப்படுத்தலாம். ஆனால் அது நிச்சியம் இலங்கை அரசிடம் இல்லை.

2. பிரபாகரனின் ஏற்கனவே எடுக்கப் பட்ட மரபணு மாதிரியை வைத்து சோதனை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.ஆனால் மீண்டும் பிரபாகரனின் மரபணு மாதிரி திட்டவட்டமாக இலங்கை அரசிடம் இருக்க வாய்ப்பில்லை.

3. பிரபாகரனின் மகன் சார்லஸ் மரபணு மாதிரியைக் கொண்டு பிரபாகரனின் மரபணு சோதனை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.அதுவும் சார்லசின் மரணம் உண்மை மற்றும் அவர் உடல் இலங்கை அரசிடம் கிடைத்தது என்று உறுதியாக நம்பும் பட்சத்தில்.இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.முதலில் சார்லசின் மரபணு மாதிரி சரியானது தான என்று நீருபிக்க வேண்டும்.

அதற்கு அவரின் தாய் மற்றும் தந்தையின் மரபணு மாதிரிகள் தேவை.கட்டாயமாக தாயின் மரபணு கிடைக்கவோ,அரசிடம் இருக்கவோ வாய்ப்பில்லை.அதனால் பிரபாகரன் மற்றும் அவரின் மகன் மரபணுவை உபயோகித்து தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

அந்த அளவிற்கு இவ்வளவு குறுகிய நேரத்தில் மரபணு சோதனை செய்யும் விஞ்ஞானக் கூடங்கள் இலங்கையில் இல்லை. இதை வைத்து தான் கருணாநிதியும் பிரபாகரனின் மரணம் உறுதி செய்யப் படவில்லை என்று கூறுகிறார் போல் உள்ளது.

இதுவரை இலங்கை அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை.அதனால் இலங்கை அரசு ஒன்று அறிவியல் பூர்வமான நீருபணத்தை வெளியிடல் வேண்டும் இல்லை என்றால் பிரபாகரனைப் பற்றி தங்களிடம் போதுமான தகவல் இல்லை என்று கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக