வெள்ளி, 15 மே, 2009

ஏ.கே..அந்தோணி அடுத்த பிரதம மந்திரியா?



காங்கிரஸ் தலைமையில் தான் மத்தியில் ஆட்சி அமையும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.மன்மோகன் சிங் என்றாலே இடது சாரிகளுக்கு கொஞ்ச நாளாக கசப்பாக இருக்கிறது.எல்லாம் 123 தான் காரணம்.ராகுல் காந்திக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் வேண்டும் என்று நினைக்கிறார் சோனியா.அதனால் மற்றொரு நேர்மையான காங்கிரஸ் அரசியல் வாதியான ஏ.கே.அந்தோணியை பிரதமராக்க முயற்சி நடக்கிறது.இடது சாரிகளும், குறிப்பாக மேற்குவங்க இடது சாரிகள் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி பிரதிபா காங்கிரசைத் தான் முதலில் அரசு அமைக்க அழைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.உடனே பெட்டிகள் கைமாறும். மேலும் ஒரு பொம்மைப் பிரதமரை வைத்து சோனியா ஆட்சி அமர்களமாக நடக்க வாய்பிருக்கிறது.ஏ.கே..அந்தோணி இராணுவ அமைச்சராக இருந்து தான் இலங்கைக்கு உதவினார் என்பதெல்லாம் தி.மு.க மற்றும் அண்ணா.தி.மு.க மறக்க ரொம்ப நேரம் ஆகாது.என்ன கூத்தெல்லாம் நடக்கப் போகிறதோ ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.இலங்கை தமிழர் பிரச்சனையை முற்றிலும் மறக்க இன்னும் ஓர் சந்தர்ப்பம்.

http://publication.samachar.com/pub_article.php?id=4239831&navname=General%20&moreurl=http://publication.samachar.com/newindianexpress/general/newindianexpress.php&homeurl=http://www.samachar.com&nextids=4247215|4239831|4239822|4243996|4247216&nextIndex=2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக